செய்திகள்
கோப்புபடம்

திசையன்விளை அருகே வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண்கள் 2 பேர் தற்கொலை

Published On 2020-10-16 12:41 GMT   |   Update On 2020-10-16 12:41 GMT
திசையன்விளை அருகே வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த லிங்கத்துரை மகள் வினிதா (வயது 21). இவருக்கும், நல்லம்மாள்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 29-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், மாப்பிள்ளையை வினிதாவிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்கையில் வெறுப்படைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டு குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் முத்துலட்சுமி (21). இவர் சங்கரன் குடியிருப்பை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் முத்துலட்சுமியின் பெற்றோருக்கு தெரிந்துள்ளது. இதை அறிந்த முத்துலட்சுமி பெற்றோருக்கு பயந்து விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவங்கள் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News