செய்திகள்
வைரல் புகைப்படம்

டெல்லி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2021-09-13 05:16 GMT   |   Update On 2021-09-13 05:16 GMT
விமான நிலையம் ஒன்றில் பலர் ஒன்றிணைந்து விமானத்தை தள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், பலர் ஒன்றிணைந்து விமானம் ஒன்றை தள்ளுவதை காட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை தள்ளுகின்றனர் எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இது 2007 ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்டாங்கில் உள்ள யாண்டை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பது ஷாங்டாங் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஆவர்.



இந்த புகைப்படம் 2007, ஆகஸ்ட் 14 ஆம் தேதி எடுக்கப்பட்டது ஆகும். இதே தகவலை உறுதிப்படுத்தும் செய்தி குறிப்பு இணையத்தில் இடம்பெற்று இருக்கிறது. ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்ததை அடுத்து ஷாங்டாங் பாம்பர்டியர் சி.ஆர்.ஜெ.200 விமானத்தை ஊழியர்கள் தள்ளினர். அதே தினத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

அந்த வகையில் தற்போது வைரலாகும் புகைப்படம் டெல்லி விமான நிலையத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இது சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்றும் உறுதியாகிவிட்டது.

Tags:    

Similar News