செய்திகள்

பல்லடம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்- கலெக்டர் ஆய்வு

Published On 2018-12-07 12:50 GMT   |   Update On 2018-12-07 12:50 GMT
பல்லடம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பூர், டிச. 7-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம், வடுகபாளையம் புதூர், மாணிக்காபுரம் மற்றும் கோடாங்கிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.100.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பல்லடம் ஊராட்சி ஒன்றியம், வடுக பாளையம் புதூர் ஊராட்சி, வடுகபாளையம் புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.12.83 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிசுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்ததையும், பள்ளி வளாகத்தில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த புதிய அங்கன்வாடி மைய கட்டிடனத்தினையும், மாணிக்காபுரம் ஊராட்சி மின்நகர் பகுதியில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி நிலையத்தினையும், அதே பகுதியில், ராஜீவ்காந்தி ஊராட்சி கட்டிடங்கள் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஊராட்சி சேவை மையத்தை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் கோடாங்கிபாளையம் ஊராட்சி சின்ன கோடாங்கி பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.90 லட்சம் மதிப்பீட்டில் ஓடையில் நடுவே கான்கீரீட் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் அதே பகுதியில், ரூ.2.03 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீரை சேமிக்கும் வகையில் வரத்து வாரியில் குழிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் என பல்லடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.100.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பால சுப்பிரமணியன், திட்ட அலுவலர் கிரி, உதவி செயற்பொறியாளர் (சாலைகள்) மீனாகுமாரி, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, வில்சன் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News