செய்திகள்
மரணம்

கொடைக்கானல் அருகே வாலிபர் மர்ம மரணம்

Published On 2021-02-22 05:23 GMT   |   Update On 2021-02-22 05:23 GMT
கொடைக்கானல் அருகே வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தினமணிநகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 34). இவரது நண்பர் மதுரையை சேர்ந்த கேசவன் (35). இவருக்கு மங்களம்கொம்புவில் சொந்த வீடு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வினோத்குமார், கேசவன் மற்றும் 5 பேருடன் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான மங்களம்கொம்புவுக்கு வந்தார். பின்னர் அங்கு சுற்றுலா சென்றுவிட்டு அங்குள்ள கேசவன் வீட்டில் இரவு தங்கி இருந்தனர். நேற்று காலை அனைவரும் எழுந்தனர். வினோத்குமார் மட்டும் படுத்திருந்தார். அவரை எழுப்பி பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து கேசவன் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வினோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோத்குமாரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News