செய்திகள்
நகை பறிப்பு

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2021-09-17 09:27 GMT   |   Update On 2021-09-17 09:27 GMT
ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டை அடுத்துள்ள புலவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் லதா (வயது45).

சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென லதா கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News