உள்ளூர் செய்திகள்
சென்னை சிட்டி சென்டர் அருகே இருசக்கர வாகன விபத்தில் முதியவர் பலி
சென்னை சிட்டி சென்டர் அருகே இருசக்கர வாகன விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டி சென்டர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் மோதியது. இதில் திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் (வயது 55) என்ற முதியவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 2 இளைஞர்களில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.