வழிபாடு
தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில் வருகிற 13-ந்தேதி தேரோட்டம்

Published On 2022-04-02 08:41 GMT   |   Update On 2022-04-02 08:41 GMT
தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.
தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வருகிற 16-ம் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ம்தேதி மாலை முத்துப்பல்லக்கில் சந்திரசேகரசாமி புறப்பாடும், 11-ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சாமி-அம்மன் புறப்பாடும் நடைபெற உள்ளது. வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்த தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News