செய்திகள்
நெஸ் வாடியா

ஐபிஎல் போட்டிக்கு முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும்: பஞ்சாப் அணி உரிமையாளர்

Published On 2019-11-07 15:06 GMT   |   Update On 2019-11-07 15:06 GMT
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அதேபோல் ஐபிஎல் தொடரில் போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ-க்கு நெஸ் வாடியா எழுதியுள்ள கடிதத்தில் ‘‘இது மிகவும் சிறப்பு வாய்ந்த நகர்வு. தொடக்க விழா தற்போது நடைபெறாததால், இது சரியான நேரம். ஒரு போட்டியின் தொடக்க விழாவின் அவசியம் மற்றும் மதிப்பை நான் எப்போதும் வியந்ததுண்டு. இந்திய பிரிமீயர் லீக்கில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.

சினிமா திரை அரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதேபோல் கால்பந்து லீக் (பிஎஸ்எல்), புரோ கபடி ஆகியவற்றிலும் இசைக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News