செய்திகள்
தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க. அழகிரி
தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அதை ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறினார்.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்ற ரஜினி அதே கருத்தை சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கமல் 60-வது ஆண்டு கலைத்துறை பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, தமிழகத்துக்கு ஆளுமை வெற்றிடம் இன்னும் இருப்பதாக கூறினார். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டபோது, தமிழ்நாட்டில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் அதை ரஜினி நிரப்புவார் என்றார்.
ரஜினி கட்சி தொடங்கினால் அதில் நீங்கள் சேருவீர்களா? என்ற கேள்விக்கு மு.க. அழகிரி பதில் சொல்லாமல் சென்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்ற ரஜினி அதே கருத்தை சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கமல் 60-வது ஆண்டு கலைத்துறை பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, தமிழகத்துக்கு ஆளுமை வெற்றிடம் இன்னும் இருப்பதாக கூறினார். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மதுரையில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டபோது, தமிழ்நாட்டில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் அதை ரஜினி நிரப்புவார் என்றார்.
ரஜினி கட்சி தொடங்கினால் அதில் நீங்கள் சேருவீர்களா? என்ற கேள்விக்கு மு.க. அழகிரி பதில் சொல்லாமல் சென்றார்.