லைஃப்ஸ்டைல்
ஆவாரம் பூ கருப்பட்டி தேநீர்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ கருப்பட்டி தேநீர்

Published On 2021-05-26 05:47 GMT   |   Update On 2021-05-26 05:47 GMT
தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:

ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
கருப்பட்டி - சிறிய துண்டு
மிளகு அரை - டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்
ஏலக்காய் - 2

செய்முறை :

ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

Tags:    

Similar News