ஆன்மிகம்
பள்ளிப்பட்டில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு வழிபாடு

பள்ளிப்பட்டில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2020-09-21 04:06 GMT   |   Update On 2020-09-21 04:06 GMT
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் கோவிலில் சிறப்பு வழிபாடு (பணிவிடை) நடைபெற்றது.
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்டருக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு (பணிவிடை) நடைபெற்று வருகிறது.

தமிழ்மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷ நாளாகும். அந்த வகையில் புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணியளவில் வழிபாடு மற்றும் உகப்படிப்பு நடைபெற்றது.

பின்னர் பகல் 12 மணியளவில் உச்சிப்படிப்பும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் மாலையில் வழிபாடு மற்றும் உகப்படிப்பு நடைபெற்றது. இதில் பள்ளிப்பட்டு, கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News