செய்திகள்
திருட்டு

சாயல்குடி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு

Published On 2021-09-23 10:23 GMT   |   Update On 2021-09-23 10:23 GMT
சாயல்குடி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே துரைசாமிபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாயல்குடி மாதவன் நகரில் வசிக்கும் முனியராஜ் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.

தினமும் பூசாரி காலை 6 மணிக்கு கோவிலை திறந்து இரவு 9 மணிக்கு அடைத்துவிட்டு செல்வது வழக்கம்.

21.09.201-ந்தேதி இரவு 9 மணிக்கு கோவிலை அடைத்து விட்டு வழக்கம் போல் நேற்று காலை 6 மணிக்கு பூசாரி கோவிலை திறந்து பார்த்தபோது சாமி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைந்த நிலையில் இருந்தது.

உண்டியலில் இருந்த பணம் மற்றும் வேண்டுதலுக்கு உண்டியலில் போடப்பட்ட 1 பவுன் தங்க தாலியும் மாயமானது.

இரவில் யாரோ இரும்பு கிரில் கம்பி வழியே நுழைந்து உண்டியலின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். மேலும் உண்டியலில் இருந்த ரூ.15 ஆயிரமும் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து துரை சாமிபுரம் நாடார் உறவின் முறை சங்கத்தின் தலைவர் முத்துசாமி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News