செய்திகள்
குப்பையை எரித்த போது துப்புரவு பெண் பணியாளர் தீயில் கருகி பலி
விருதுநகர் அருகே குப்பையை எரித்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்து துப்புரவு பெண் பணியாளர் பரிதாபமாக பலியானார்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர் புதுக்கோட்டை பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 6-ந் தேதி மாரியம்மாள் வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை சேகரித்து பின்புறம் குவித்து தீ வைத்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் எரியவில்லை. இதையடுத்து அவர் மண்எண்ணையை ஊற்றி தீ மூட்டியதாக தெரிகிறது. இதில் எதிர்பாராத விதமாக மாரியம்மாளின் சேலையில் தீப்பிடித்தது.
கண் இமைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் அலறித்துடித்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.