ஆன்மிகம்
சந்திரமாரியம்மன்

நாகூர் அருகே சந்திரமாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-04-06 06:05 GMT   |   Update On 2021-04-06 06:05 GMT
நாகூரை அடுத்த முட்டம் கிராமத்தில் சந்திரமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா ருத்ராபிஷேகத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இரவு பூச்சொரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகூரை அடுத்த முட்டம் கிராமத்தில் சந்திரமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை ருத்ராபிஷேகத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இரவு பூச்சொரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News