செய்திகள்
விபத்து

பிரேக் பிடிக்காததால் பள்ளத்தாக்கில் விழுந்த டிரக் -5 பேர் உயிரிழப்பு

Published On 2021-11-22 12:12 GMT   |   Update On 2021-11-22 12:12 GMT
உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக டிரக்கில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐசால்:

மிசோரம் மாநிலம், காஜால் மாவட்டம், ரபங் கிராமத்தை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த டிரக், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரபங் கிராமத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சுமார் 19 பேர் டிரக்கில் வந்ததாகவும், பிரேக் செயலிழந்து விபத்து ஏற்பட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News