செய்திகள்
டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர்-மூங்கில்குடி சாலை வடக்குவெளி பகுதியில் டாஸ்மாக்கடை உள்ளது. இந்த கடையில் சங்கர் (வயது48) மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கீழ்வேளூர் நேருநகரை சேர்ந்த விக்னேஷ் (25), அதே பகுதியை சேர்ந்த எழிலரசன் (31) ஆகியோர் டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு விற்பனையாளர் லட்சுமணனிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சங்கர் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், எழிலரசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.