செய்திகள்
பொன் ராதாகிருஷ்ணன்

முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அதிமுக-வுக்கு உரிமை உண்டு- பொன் ராதாகிருஷ்ணன்

Published On 2020-12-27 13:31 GMT   |   Update On 2020-12-27 13:31 GMT
அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிதம்பரம்:

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை, அதில் மாற்றமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என கூறிருந்தார்.

இதுபோன்று, பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறியது பாஜக – அதிமுக அமைச்சர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும். அதிமுக கூட்டணியில் தான் பாஜக அங்கம் வகிக்கிறது. 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News