செய்திகள்
ரேஷன் அரிசி கடத்திய அண்ணன்-தம்பி குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்திய அண்ணன்-தம்பியை கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 53). இவரது சகோதரர் ஆறுமுகம் (36). இவர்கள், ரேஷன் அரிசியை கடத்திய போது திருவண்ணாமலை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஏழுமலை, ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 53). இவரது சகோதரர் ஆறுமுகம் (36). இவர்கள், ரேஷன் அரிசியை கடத்திய போது திருவண்ணாமலை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஏழுமலை, ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.