செய்திகள்
கைது

குளித்தலை அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-09-14 08:15 GMT   |   Update On 2021-09-14 08:15 GMT
குளித்தலை அருகே மது விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:

குளித்தலை அருகே சட்டவிரோதமாக மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, குளித்தலை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கோட்டமேடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மது விற்ற நாராயணன் (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் நடுப்பட்டி பகுதியில் தனது வீட்டின் பின்புறம் மது விற்ற கண்ணன் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News