செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

வேலூரில் நாளை மின்நிறுத்தம்

Published On 2021-02-19 09:02 GMT   |   Update On 2021-02-19 09:02 GMT
வேலூரில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
வேலூர்:

வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேலூர் நகரம், புதிய, பழைய பஸ் நிலையங்கள், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம், வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News