செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-08-26 07:20 GMT   |   Update On 2021-08-26 07:20 GMT
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மேற்படி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு பயனடையுமாறு விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இன்று (வியாழக்கிழமை) அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் திருச்சுழி ரோட்டில் உள்ள ஸ்ரீ சவுடம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியிலும், நாளை (வெள்ளிக்கிழமை) ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகபாண்டியன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

எனவே தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மேற்படி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு பயனடையுமாறு விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஹேமலதா கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News