செய்திகள்
ஓசூரில் பனி படர்ந்துள்ள காட்சி.

சூளகிரி-ஓசூரில் கடும் குளிர்

Published On 2020-01-14 14:53 GMT   |   Update On 2020-01-14 14:53 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொட்டர் மற்றும் குள்ளா அணிந்தவாறு வெளியில் நடமாடினர்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் மலை குன்றுகள் மற்றும் வனபகுதியை சார்ந்த கிராமங்கள் அதிகம் உள்ளன. தற்போது, கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. 

வழக்கத்தைவிட இன்று கடும் குளிர் நிலவியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொட்டர் மற்றும் குள்ளா அணிந்தவாறு வெளியில் நடமாடினர். வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். 

மேலும், ஓசூரில் - பாகலூர் சாலையில் குடியிருப்பு பகுதிகளில் இன்று காலை 9 மணிவரை பனி படர்ந்து காணப்பட்டது.
Tags:    

Similar News