ஆட்டோமொபைல்
டாடா சிப்டிரான்

டாடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்

Published On 2019-09-20 09:57 GMT   |   Update On 2019-09-20 09:57 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக இ.வி. தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக இ.வி. தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சிப்டிரான் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் டாடா நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது. 

இத்துடன் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டில் புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார் சிப்டிரான் இ.வி. தொழில்நுட்பத்தை தழுவி உருவாகிறது.



சிப்டிரான் இ.வி. பவர்டிரெயின் தொழில்நுட்பம் டாடாவின் எதிர்கால வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை அதிக வோல்டேஜ் சிஸ்டம், நீண்ட பேட்டரி ரேன்ஜ், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் மற்றும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும். புதிய பவர்டிரெயின் எட்டு வருட வாரண்டியுடன் வரும் என கூறப்படுகிறது.

டாடாவின் புதிய சிப்டிரான் தொழில்நுட்பம் தலைசிறந்த ஏ.சி. மோட்டார் உடன் வரும் என தெரிகிறது. இது தலைசிறந்த செயல்திறன் வழங்கும் என்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் பேட்டரி சிஸ்டம்களை கொண்டிருக்கிறது. புதிய இ.வி. தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் கார்களில் சிறந்த பிரேக்கிங், பேட்டரிகளை கார் ஓட்டும் போதே சார்ஜ் செய்யும் வசதி கொண்டிருக்கும்.
Tags:    

Similar News