செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 12 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-11-21 17:33 GMT   |   Update On 2020-11-21 17:33 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 663 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2 ஆயிரத்து 133 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 43 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 28
செங்கல்பட்டு - 887
சென்னை - 4,498
கோவை - 748
கடலூர் - 137
தர்மபுரி - 135
திண்டுக்கல் - 77
ஈரோடு - 285
கள்ளக்குறிச்சி - 96
காஞ்சிபுரம் - 467
கன்னியாகுமரி - 149
கரூர் - 236
கிருஷ்ணகிரி - 260
மதுரை - 264
நாகை - 279
நாமக்கல் - 274
நீலகிரி - 136
பெரம்பலூர் - 4
புதுக்கோட்டை - 123
ராமநாதபுரம் - 44
ராணிப்பேட்டை - 142
சேலம் - 627
சிவகங்கை - 68
தென்காசி - 46
தஞ்சாவூர் - 181
தேனி - 30
திருப்பத்தூர் - 92
திருவள்ளூர் - 664
திருவண்ணாமலை - 210
திருவாரூர் - 182
தூத்துக்குடி - 128
திருநெல்வேலி - 148
திருப்பூர் - 650
திருச்சி - 149
வேலூர் - 239
விழுப்புரம் - 141
விருதுநகர் - 79
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 2
உள்நாடு - 11
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 12,916
Tags:    

Similar News