செய்திகள்
சென்னையில் மழை

சென்னையில் நள்ளிரவு முதல் லேசான மழை

Published On 2021-10-21 19:17 GMT   |   Update On 2021-10-21 19:17 GMT
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்தது.
சென்னை:

குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் லேசான மழை பெய்தது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  

Tags:    

Similar News