செய்திகள்
தஞ்சாவூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது
தஞ்சாவூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்த நகர் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற குளிச்சப்பட்டு பகுதியை சேர்ந்த தியாகராஜன்(வயது 42), மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்த கணேசன்(52), டி.பி.எஸ். நகரை சேர்ந்த சக்திவேல்(36) மற்றும் பர்மா காலனி பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற அண்ணா நகரை சேர்ந்த ஜெபஸ்டின்(47), புதிய பாத்திமா நகரை சேர்ந்த ராஜேந்திரன்(43), தில்லை நகரை சேர்ந்த மாணிக்கம்(36) ஆகியோரை தஞ்சை தெற்கு போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் வடக்கு வாசல் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தியை(55) மேற்கு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.