செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

அரியணை யாருக்கு என்பதை மக்கள் முடிவு செய்வர்- முதலமைச்சர்

Published On 2020-08-07 08:51 GMT   |   Update On 2020-08-07 08:51 GMT
தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்தபிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்.

EIA எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய தற்போதைக்கு வாய்ப்பில்லை; அது எளிமையாக்கப்பட்டது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததும் பொது போக்குவரத்து தொடங்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவை அரியணையில் ஏற்ற மு.க.ஸ்டாலின் சூளுரைத்தது பற்றிய கேள்விக்கு, தமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.


Tags:    

Similar News