செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே மது கடத்தியவர் கைது

Published On 2021-09-15 18:00 GMT   |   Update On 2021-09-15 18:00 GMT
தேன்கனிக்கோட்டை அருகே மது கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே தக்கட்டி சோதனைச்சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திய போது மோட்டார் சைக்கிளில் மது கடத்தி வந்த பிலிகுண்டுலு பகுதியை சேர்ந்த ஏசுராஜ் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 94 மதுபாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
Tags:    

Similar News