செய்திகள்
கைது

நெல்லை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு- 4 பேர் கைது

Published On 2020-09-09 13:27 GMT   |   Update On 2020-09-09 13:27 GMT
நெல்லை அருகே வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த பாலாமடையை சேர்ந்தவர் செந்தில் (வயது 22). இவர், கடந்த 6-ந் தேதி ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் செந்திலை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக உதயநேரியை சேர்ந்த இசக்கிபாண்டி (23), கண்ணையா (21), பேச்சிமுத்து (23), ஆறுமுகம் (26) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News