செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்.

வெள்ளக்கோவிலில் ரூ.4 1/2 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

Published On 2021-06-23 08:05 GMT   |   Update On 2021-06-23 08:05 GMT
போலீசாரின் சோதனை குறித்து முன்கூட்டியே தெரிந்து கொண்ட ஹரி தப்பிவிட்டார்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம்  வெள்ளகோவில் பெரியசாமி நகரை சேர்ந்தவர் ஹரி (வயது 22). இவர் மளிகை கடைகளுக்கு பொருட்கள்  சப்ளை செய்வதாக கூறி  அண்ணா நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போதை பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன் தலைமையில்  இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் ஹரியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு போலி பீடி 200 பண்டல், பான் மசாலா 10 மூட்டை என மொத்தம் ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் சோதனை குறித்து முன்கூட்டியே தெரிந்து கொண்ட ஹரி தப்பிவிட்டார். வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News