செய்திகள்
பாராளுமன்றம்

அரசியல் சாசன தின நிகழ்ச்சி- திமுக, திரிணாமுல் காங். உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Published On 2021-11-26 05:06 GMT   |   Update On 2021-11-26 06:40 GMT
அரசியல் சாசன தினத்தையொட்டி, பாராளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
புதுடெல்லி:

அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உரையாற்றுகிறார்கள்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை புறக்கணித்தன.
Tags:    

Similar News