செய்திகள்
திருட்டு

அரூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2021-10-24 11:17 GMT   |   Update On 2021-10-24 11:17 GMT
அரூரில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் தில்லை நகரை சேர்ந்தவர் தெய்வம். இவருடைய மனைவி சற்குணம் (வயது 42). இவர்கள் 2 பேரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பணி தொடர்பாக வெளியூர் சென்று விட்டனர். இந்த நிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அருகே வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சற்குணம் அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News