ஆன்மிகம்
குருபகவான்

குருவுக்கு ஜோடி தீபம்

Published On 2019-10-19 07:52 GMT   |   Update On 2019-10-19 07:52 GMT
இந்த மாத இறுதியில் குருப்பெயர்ச்சி வர இருக்கிறது. அதற்கு முன்பாகவே குரு பகவானை வழிபாடு செய்து வந்தால், உங்களின் வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ளலாம்.
இந்த மாத இறுதியில் குருப்பெயர்ச்சி வர இருக்கிறது. அதற்கு முன்பாகவே குரு பகவானை வழிபாடு செய்து வந்தால், உங்களின் வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ளலாம்.

குரு பகவானுக்கு கற்கண்டு சாதம், தயிர் சாதம், கொண்டைக்கடலை, வாழைப்பழம், பால், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை படைத்து, மஞ்சள் வண்ண மலர் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பின்னர் குருவுக்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபட்டால் நெஞ்சம் மகிழும் வாழ்க்கை வந்தமையும். தம்பதியர் ஜோடி தீபம் ஏற்றி வழிபடலாம்.

அதை நெருக்கமாக வைத்து ஏற்றினால், தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். தீபத்தை குருவை பார்த்தபடி வைக்க வேண்டும். வயதுக்கு ஏற்ற வகையிலும் தீபங்களை ஏற்றலாம். இந்த வழிபாட்டை வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

Tags:    

Similar News