செய்திகள்
திருட்டு

பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு- போலீசார் விசாரணை

Published On 2021-09-14 10:08 GMT   |   Update On 2021-09-14 10:08 GMT
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாபநாசம்:

பாபநாசம் திருப்பாலத்துறை ஹத்திஜா காலனியில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 30).இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் அதிகாலையில் வந்து பார்க்கும் பொழுது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கார்த்திக் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News