தொழில்நுட்பச் செய்திகள்
போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ

60 மணி நேர பிளேபேக் வழங்கும் புது இயர்போன் அறிமுகம்

Published On 2021-12-02 09:58 GMT   |   Update On 2021-12-02 09:58 GMT
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ப்ளூடூத் இயர்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


இந்தியாவை சேர்ந்த போட் நிறுவனம் புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன் போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேர பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

மேலும் இத்தனை அளவு பேக்கப் வழங்கும் போட் நிறுவனத்தின் முதல் இயர்போன் இது ஆகும். இதன் தோற்றம் போட் ஏற்கனவே அறிமுகம் செய்த ராக்கர்ஸ் 333 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த இயர்போனில் உள்ள ஏ.எஸ்.ஏ.பி. பாஸ்ட் சார்ஜிங் வசதி பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.



மிக குறைந்த எடையில் உருவாகி இருக்கும் போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி, இன்-லைன் பிளேபேக் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது. புதிய போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ பிளாக், புளூ, ரெட் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 ஆகும். இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News