உள்ளூர் செய்திகள்
தென்காசி இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற போது எடுத்தபடம்.

தென்காசியில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை

Published On 2022-05-07 09:52 GMT   |   Update On 2022-05-07 09:52 GMT
தென்காசி இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
சாம்பவர்வடகரை:

இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் ஆலோசனையின்படி தென்காசி மாவட்டம் சிவந்தி நகரில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது.

மாநிலத் துணைத் தலைவர் லூர்த் நாடார் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

இல்லங்கள் தோறும் இந்திய நாடார்கள் பேரமைப்பு என்ற நோக்கத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் இந்திய நாடார்கள் பேரமைப்பின் கொடியை ஏற்ற வேண்டும். தென்காசி மாவட்டத்தில் மே மாதத்திற்குள் 50,000 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்திய நாடார்கள் பெயர் அமைப்பு கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பேரமைப்பின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், செயல்பாடுகளையும், செயல்முறைகளையும் இதுவரை செய்த அனைத்து செயல்பாடுகளையும் எடுத்துகூறி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அச்சன்புதூர் முருகன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மாயகிருஷ்ணன், சிவந்தி நகர் இசக்கி முத்து நாடார், சுப்பையா நாடார், வெங்கடேஷ், சாம்பவர் வடகரை ஹரி மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News