உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் இடைவெளி இல்லாமல் வைக்கப்பட்ட தடுப்புகள்.

விபத்தை தடுக்க இடைவெளி இல்லாமல் வைக்கப்பட்ட சாலை தடுப்புகள்

Published On 2022-04-17 08:06 GMT   |   Update On 2022-04-17 08:06 GMT
குமாரபாளையத்தில் விபத்தை தடுக்க இடைவெளி இல்லாமல் வைக்கப்பட்ட சாலை தடுப்புகள் வைக்கபட்டுள்ளன.
குமாரபாளையம்,

குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் நிலையம் முதல் கத்தேரி பிரிவு வரை 2 கி.மீ. தூரம் சாலை நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதியில் மின் கம்பங்கள் அமைத்து உள்ளதால், அந்த இடங்களில் தடுப்புகள் சற்று தள்ளி வைக்கபட்டுள்ளன. 

சில நபர்கள் அந்த சிறு வழியில் சாலையை கடந்து வருவதால், அடிக்கடி பலர் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். இதனை தடுக்க மின் கம்பங்கள் வைக்கப்பட்ட இடங்கள், அதிக இடைவெளி உள்ள இடங்கள் ஆகிய இடங்களில் டிவைடர்களை நெடுஞ்சாலை பணியாளர்கள் இடைவெளி இல்லாதவாறு பொக்லைன் உதவியுடன் நகர்த்தி வைத்தனர்.
Tags:    

Similar News