செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா - சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி

Published On 2021-04-22 23:16 GMT   |   Update On 2021-04-23 07:19 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே நேற்று மட்டும் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 191-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 265 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 771-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2 ஆயிரத்து 186 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 61 வயது ஆண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 234-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது
Tags:    

Similar News