ஆன்மிகம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு பூஜை
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், 2 கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி கோபுர தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், 2 கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி கோபுர தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.