செய்திகள்
நகை பறிப்பு

அனுப்பானடியில் ஜவுளிக்கடை பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபர் கைது

Published On 2021-11-22 10:21 GMT   |   Update On 2021-11-22 10:21 GMT
அனுப்பானடியில் ஜவுளிக்கடை பெண் ஊழியரிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை அனுப்பானடி வாசுகி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி லட்சுமி (28). இவர் கீழ வெளி வீதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்றார்.

அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் லட்சுமி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார்.

அதிர்ச்சியடைந்த லட்சுமி நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனாலும் திருடன் பெண்ணை தாக்கி நகையை பறித்துக்கொண்டு தப்பினான்.

அந்த வழியாக ரோந்து வந்த கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் திருடனை விரட்டினர்.

போலீசாரிடமிருந்து தப்பிக்க திருடன் அங்கு சுவர் ஏறி குதித்தார். இதில் அவர் காயமடைந்தார்.

போலீசார் திருடனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முனியாண்டி மகன் பரத் என்பது தெரியவந்தது.

வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்த பரத் செலவுக்காக நகையை திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News