செய்திகள்
கைது

திருப்பூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2020-10-14 14:28 GMT   |   Update On 2020-10-14 14:28 GMT
திருப்பூர் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மத்திய போலீசார் நேற்று கே.வி. ஆர். நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த இடுவம்பாளையத்தை சேர்ந்த கோபி (வயதுது20) , ராமநாதபுரத்தை சேர்ந்த சுந்தர் (22) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுபோல் பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த சதீஷ் (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News