செய்திகள்
கோப்புபடம்

குன்னத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2020-11-19 13:10 GMT   |   Update On 2020-11-19 13:10 GMT
குன்னத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சன்னதி தெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகன் சின்ராசு (வயது 20). இவர் வேப்பூர் சாலையில் உள்ள இருசக்கர வானம் பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். 

நேற்று காலை சின்ராசு கடையில் வேலை செய்து கொண்டு இருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது சின்ராசு இறந்து கிடந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News