செய்திகள்
கடல் அலை

120 கி.மீ. வேகத்தில் புயல் காற்று: 6 அடி உயரத்திற்கு ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்

Published On 2020-11-25 19:28 GMT   |   Update On 2020-11-25 19:28 GMT
புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில், 120 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசுவதால் ஆறு அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. புயலின் முன்பகுதி முழுவதுமாக கரையை கடந்த பிறகு, மையப்பகுதி விரைவில் கரையை கடக்க இருக்கிறது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாக கடல் அலைகள் சுமார் ஆறு உயரத்திற்கு எழும்பி ஆர்ப்பரிக்கின்றன.

கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News