செய்திகள்
வேடசந்தூரில் ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி
வேடசந்தூரில் இன்று காலை ஜீப் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் அருகில் உள்ள கன்னிவாடியை சேர்ந்தவர் சதீஷ் (வயது20). வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகவில்லை. இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து மில்லுக்கு ஜீப்பில் சென்றார்.
வேடசந்தூர் அருகே உள்ள பாலத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள பாலத்தில் ஜீப் மோதியது. பின்னர் அருகில் இருந்த பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். இருந்தபோதும் சதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள கன்னிவாடியை சேர்ந்தவர் சதீஷ் (வயது20). வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகவில்லை. இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து மில்லுக்கு ஜீப்பில் சென்றார்.
வேடசந்தூர் அருகே உள்ள பாலத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக அங்குள்ள பாலத்தில் ஜீப் மோதியது. பின்னர் அருகில் இருந்த பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். இருந்தபோதும் சதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.