செய்திகள்
பெரியசாமி

திண்டுக்கல் டிராகன்ஸை 5 ரன்னில் வீழ்த்தி டிஎன்பிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2019-08-11 13:28 GMT   |   Update On 2019-08-11 13:38 GMT
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் குவாலிபையர்-1 ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கங்கா ஸ்ரீதர் ராஜூ சிறப்பாக விளையாடி 54 பந்தில் இரண்டு சிக்ஸ், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் தொடக்கத்தில் விக்கெட்டை காப்பாற்றி சிறப்பாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 8.5 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஜெகதீசன் 24 பந்தில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்மிழந்த சிறிது நேரத்தில் ஹரி நிஷாந்த் 32 பந்தில் 29 ரன்களில் வெளியேறினார்.



அதன்பின் வந்த விவேக் (11 பந்தில் 20 ரன்), சதுர்வேத் (6 பந்தில் 14 ரன்) ரன்அவுட் ஆக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் டார்கெட்டை எட்ட முடியவில்லை.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Tags:    

Similar News