ஆன்மிகம்
கல்கருடன்

நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோவிலில் நாளை கல்கருட சேவை நடக்கிறது

Published On 2021-03-22 07:23 GMT   |   Update On 2021-03-22 07:23 GMT
நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை(செவ்வாய்க்கிழமை) கல்கருட சேவை நடக்கிறது.
கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா 11 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது உற்சவர் பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை கல்கருட சேவை நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 28-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News