உள்ளூர் செய்திகள்
பெண்கள் நூதன போராட்டம் நடத்திய காட்சி.

பத்மனாபபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: பெண்கள் நூதன போராட்டம்

Published On 2022-01-11 10:40 GMT   |   Update On 2022-01-11 10:40 GMT
பத்மனாபபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் தக்கலை அடுத்து உள்ளது வெட்டிக்கோணம் கிராமம். சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அவர்களின் குடிநீர் தேவைக்காக பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் 2013-ம் ஆண்டு சிறு மின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிறு மின்விசை குடிநீர் தொட்டி பழுது ஏற்பட்டு சரி செய்யப்படாமல் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அந்த கிராம மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று  பக்கத்து கிராமத்தில்  கிடைக்கும் தண்ணீர் மூலம் தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர்.

கொரோனா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கிராம மக்கள் பக்கத்து கிராமத்திற்கு சாலை வழியாக பயணித்து குடிநீர் எடுத்து செல்ல முடியாத சூழல் நிலவியது. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள்  ஒன்று திரண்டு தங்கள் கிராமத்தில் பயன்பாடின்றி இருக்கும் சிறு மின்விசை குடிநீர் தொட்டியை சீரமைத்து தர கேட்டு அந்த தொட்டிக்கு மாலை அணிவித்தும் மலர் வளையம் வைத்தும் மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம் நடத்தினர்.
Tags:    

Similar News