செய்திகள்
கைது

தனிக்குடித்தனம் நடத்த வர மறுத்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- கணவர் கைது

Published On 2021-01-16 09:03 GMT   |   Update On 2021-01-16 09:03 GMT
சிவகங்கையில் தனிக்குடித்தனம் நடத்த வர மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டியது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை இந்திராநகரை சேர்ந்தவர் முத்து (வயது 38). பெயிண்டர். இவரது மனைவி சுதா(34) இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சனையால் கணவன்-மனைவி இருவரும் கடந்த 3 வருடமாக பிரிந்து வாழ்கின்றனர். தற்போது சுதா அண்ணாமலை நகரில் உள்ள அவரது தாய் வீட்டில் வசிக்கிறார்.

சம்பவத்தன்று சுதாவின் உறவினர் ஒருவர் இறந்து போனதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுதா இந்திராநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த முத்து தனிக்குடித்தனம் போகலாம் என்று சுதாவை அழைத்தாராம். ஆனால் சுதா மறுத்து விட்டாராம். இதில் ஆத்திரம் அடைந்து முத்து மற்றும் அங்கிருந்த மற்றொரு உறவினரான முத்துக்குமார் (40) ஆகியோர் சுதாவை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்தகாயம் அடைந்த சுதாவை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மீனுப்பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முத்துவை கைது செய்தனர். முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News