செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-11-12 07:48 GMT   |   Update On 2021-11-12 09:49 GMT
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல துணை இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. அது வட தமிழகம் அதனையொட்டி பகுதிகளில் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அது மேலும் வலுவிழந்து விடும்.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அந்தமான் கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரையிலும், உள் தமிழகம் வரையிலும் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.



அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News