ஆன்மிகம்
மலை மாதேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

மலை மாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-11-05 07:38 GMT   |   Update On 2021-11-05 07:38 GMT
தீபாவளியை முன்னிட்டு மலை மாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் பலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரா மலையில் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு நேற்றுமுதல் மலைமாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நல்லெண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் மலை மாதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தீபாராதனை நடந்தது.

நேற்று அதிகாலை வெல்லத்தால் சாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த மலை மாதேஸ்வரர் பக்தர்களுக்கு சாந்த சொரூபமாக காட்சி அளித்தார்.

தீபாவளியை முன்னிட்டு கோவில் கோபுரம், வளாகம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மலைமாதேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Tags:    

Similar News